அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் வட இந்தியர்கள் பேரணி
சென்னை: ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒரே குடியிருப்பில் குடியிருந்து வரும் வட இந்தியர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரே குடியிருப்பில் ஏராளமான வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று ஒன்று சேர்ந்து ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர்.
300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இதில் கலந்து கொண்டு ஹஸாரேவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெல்ல வேண்டும், ஊழலை விரட்டியடிப்போம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய தட்டிகளை கையில் பிடித்தபடி அவர்கள் பேரணி சென்றனர்.
கடற்கரையில் பிரமாண்ட போராட்டம்
அதேபோல சென்னை மெரீனா கடற்கரையிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அமைதிப் போராட்டம் நடந்தது.
திருவான்மியூரில் ஏராளமானோர் தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications