300 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு பூங்கா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான விமான தளவாடங்கள் தயாரிப்பு பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) அமைக்கிறது தமிழக அரசு நிறுவனமான டிட்கோ.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன தொழில்களை தொடங்கி மேம்படுத்தலாம்? என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிய அளவில் மிகப்பெரிய தொழில்கேந்திரமாக உருவாகி வரும் ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய பூங்காவை அமைக்க டிட்கோ திட்டமிட்டு வருகிறது.

இதற்குத் தேவைப்படும் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்வு செய்து தருமாறு மற்றொரு அரசு நிறுவனமான சிப்காட் (தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம்) நிறுவனத்தை டிட்கோ கேட்டிருக்கிறது.

ஏரோஸ்பேஸ் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வுப்பணி எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா முழுக்க முழுக்க விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், உதிரி பாகங்களை இணைக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டிருக்கும்.

ஏற்கனவே, பன்னாட்டு வாகனங்கள் மற்றும் செல்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக ஏரோஸ்பேக் பார்க் வருவதால் தொழில்வளர்ச்சி மேலும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+