8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: 8-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆதிருமாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரசாந்த். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பிரசாந்த் தனது வீட்டருகே 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த மாணவிக்கு சமீபத்தில சடங்கு நடந்தது. இந்த விழாவில் பக்கத்து வீடு என்ற உரிமையில் கலந்து கொண்ட பிரசாந்த் மாணவிக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்துள்ளார். இது மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் பிரசாந்த்தை அழைத்து ஏன் இந்த பரிசை கொடுத்தாய் என்று சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்தை அவரது பெற்றோர் களக்காடு அருகே உள்ள மாவடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர். பின்பு பிரச்சனை தொடர்பாக இரு வீட்டாரும் சமரசமாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் பிரசாந்த் மாவடியில் உள்ள 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி அதன் உச்சியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+