ராஜபக்சேவின் அழைப்புக்கு ஜெயலலிதாவிடமிருந்து பதில் இல்லை: இலங்கை

அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந் நாட்டின் சண்டே லீடர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
இலங்கையின் வன்னிப் பகுதியில் போருக்குப் பிந்தைய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொள்ள இலங்கை கொழும்புக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிபர் ராஜபக்சே சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி மூலம் இந்த அழைப்புக் கடிதம் நேரில் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அந்த அழைப்புக்கு இதுவரை தமிழக முதல்வரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எனினும் இந்த அழைப்புக்கான பதிலை இலங்கை அரசாங்கம் உடனடியாக எதிர்பார்க்கவில்லை.
ஜெயலலிதா இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளதாலும், அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்பதாலும் கால அவகாசம் தேவைப்படும் என்று கருதுகிறோம்.
இலங்கை அதிபரின் அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரான போக்கை ஜெயலலிதா தீவிரப்படுத்தியதை தொடர்ந்து இலங்கை அரசு ராஜதந்திர நடவடிக்கையாக இந்த அழைப்பை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications