கவுன்சிலர் உள்பட 50 திமுகவினர் அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
செங்கோட்டை: திமுக கவுன்சிலர் உள்பட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
புளியங்குடி நகராட்சி 31வது வார்டு திமுக கவுன்சிலர் மாரியம்மாள் கருப்பசாமி, நகர திமுக இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, ஆறுமுகநாடார், தர்மர் நாடார், மாரியப்பன், திருமலைசாமி, கணேசன், அருணாசலகனி, அருள், மணி, செந்தில், மாயி, ராகு நடராஜன் உள்ளிட்ட 50 திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பா. செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரையப்பா, கடுவாய் என்ற முகமது உசேன், சண்முக சுந்தரம், சௌகத் அலி, கருப்பையா, கிருஷ்ணசாமி, தொகுதி இணை செயலாளர் பிவி நடராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆ. வெங்கடேசன், நகர செயலாளர் எம். தங்கவேலு, இணை செயலாளர் வீ. ராஜா, அவைத் தலைவர் பூசராஜாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.
விபத்தில் காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
விபத்தில் படுகாயம் அடைந்தவரை சந்தித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆறுதல் கூறினார்.
செங்கோட்டை நகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளராக இருக்கும் வி. கணேசன் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி உடல் நலம் விசாரித்தார்.
அமைச்சருடன் தொகுதி இணை செயலாளர் பிவி நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்ச் சங்க தலைவர் சிவனு பாண்டியன், பொருளாளர் பரமசிவன், நகர செயலாளர் தங்கவேலு, அவைத் தலைவர் பூசராஜா, துணை செயலாளர் வீ ராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேசன், ஜாகீர் உசேன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜானராஜ்,திலகர், முத்தையா, செல்வகுமாரி, வார்டு செயலாளர் முத்துராமலிங்கம், டாக்டர் ஜாபர் உள்பட பலர் சென்றனர்.












Click it and Unblock the Notifications