தூக்கு விவகாரம்: சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

Krishnaswamy
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.

சட்டசபையில் இன்று கிருஷ்ணசாமி ஒரு பிரச்சனை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சனை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார்.

இதையடுத்து அந்தப் பிரச்சனை குறித்து கிருஷ்ணசாமி பேசினார். ஆனால், அது எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து இருக்கையில் அமர்ந்த கிருஷ்ணசாமி, சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சனை குறித்துப் பேச முயற்சித்தார். அப்போதும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். நீண்ட நாட்களாகவே இந்தப் பிரச்சனையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன்.

ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+