ராஜீவ் கொலையாளிகளை ராம்ஜேத்மலானியின் உதவியாளர்கள் சந்தித்து ஆலோசனை

தூக்குத் தண்டனயை எதிர்த்து பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் இன்று மனு செய்யப்படவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்காக வக்கீல்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மூவர் சார்பாகவும் மூத்த வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, ஹரீஷ் சால்வே ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.
இந்த நிலையில் ராம்ஜேத்மலானியின் உதவி வக்கீலான டெல்லி வக்கீல் ராமசுப்ரமணியம் உள்ளிட்ட வக்கீல்கள் குழு வேலூர் சிறைக்கு வந்தது. அங்கு மூன்று பேரையும் வக்கீல்கள் சந்தித்து ஆலோனை நடத்தினர்.
முருகனை சந்தித்தார் நளினியின் தாயார் பத்மா
இதற்கிடையே, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதி முருகனை அவரது மாமியாரும், மனைவி நளினியின் தாயாருமான பத்மா சந்தித்துப் பேசினார்.
மிகவும் உருக்கமாக இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
முருகனைப் பார்க்க அனுமதி கோருகிறார் நளினி
இதற்கிடையே, கணவர் முருகனை சந்திக்க அனுமதி தருமாறு கோரி அவரது மனைவி நளினி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.
வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டதால் நளினி உடைந்து போய் காணப்படுகிறார். பெரும் சோகத்துடன் உள்ள அவர் தனது கணவரைப் பார்க்க அனுமதி கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
அவரது கோரிக்கையை அரசுக்கு சிறை நிர்வாகம் அனுப்பியுள்ளது. அரசு அனுமதி கொடுத்ததும் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications