விழுப்புரம் அருகே ஜெயின் கோவிலில் 16 சிலைகள் கொள்ளை- பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயின் கோவில் ஒன்றில், 16 சிலைகள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ஏதாநெமிலி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீநேமி தீர்த்தங்கரை ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கோயில் கருவறையில் ஐம்பொன் மற்றும் வெங்கலம், பித்தளை போன்ற 30 சிலைகள் இருந்தது.
இந்நிலையில், இரவு பூஜைகள் முடிந்து, பூசாரி லோகநாதன், கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில், கோவிலுக்கு சென்ற பெண், கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தார்.
இத்தகவல் அறிந்த பூசாரி வந்து பார்த்த போது, கோவிலில் இருந்த 30 சிலைகளில், சாமி வடிவம் கொண்ட பெரிய ஐம்பொன் தகுடு, 10 சிறிய சிலைகள் என மொத்தம் 16 சிலைகள் கொள்ளை போயிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. தினகரன், கோவில் சிலைகள் திருட்டு குறித்து விசாரித்தார். திருட்டு போன சிலைகளின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications