அன்னாவின் உடல்நலம் தேறுகிறது- அறைக்குள்ளேயே வாக்கிங் போகிறார்

ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னா. இதுதொடர்பாக நாடாளுமன்றம் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர் தனது 12 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து கர்கானில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் இன்னும் பலவீனமாகவே உள்ளது. உடலில் நீர்ச்சத்து தற்போதுதான் மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது. டாக்டர் யதீன் மேத்தா தலைமையிலான குழுவினர் அவரைப் பார்த்துக் கொள்கின்றனர்.
தற்போது சற்று தெம்பாகஅவர் இருக்கிறார். இதையடுத்து அறைக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துள்ளார்.அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, மணீஷ் சிசோடியா ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
அன்னா நலம் பெற வேண்டும் என்று வேண்டி பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துகளையும், பூங்கொத்தையும் அன்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு அன்னா நன்றி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications