தும்பிக்கை நாயகனின் அருளால் மகிழ்ச்சி, நிம்மதி தவழட்டும்- ஜெ. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி விழா நாளை தமிழகமெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
ஞான முதல்வனாம் விநாயகர் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனித்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வரர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாக துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியே அன்றி தோல்வி காணாது என்பது நம் நாட்டு மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை ஆகும்.
நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications