முல்லைப் பெரியாறு உயர் மட்டக் குழுக் கூட்டம்- புதிய அணைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான உயர் மட்டக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அப்போது புதிய அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இதுகுறித்த விளக்கம் அளிக்குமாறு கூறி கேரளாவுக்கு உயர்மட்டக் குழுத் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் உத்தரவிட்டார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவின் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பி்ல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் மற்றும் இரு மாநில வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் இரு வக்கீல்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் வாதத்தை எடுத்து வைத்தனர். அப்போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை. புதிய அணை தமிழகத்தின் தென் மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும் என்று வாதிட்டனர்.

இதையடுத்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கேரளாவுக்கு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் உத்தரவிட்டார். அதன் பின்னர் 2 வாரங்களுக்குள் தமிழகம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+