கோவை, திருப்பூரில் தொழிலாளர்களுடன் கைகோர்த்து விசைத்தறி உரிமையாளர்களும் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், நெசவு பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில், விசைத்தறி உரிமையாளர்களும் இணைந்து கொண்டதால், இரு மாவட்டங்களும் ஸ்தம்பித்தன.

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம் போன்ற பல்வேறு பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் சோமனூர் பகுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.

தினமும் 12 முதல் 14 மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 180 முதல் 200 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையேயான 3 ஆண்டுகளுக்கு 1 முறை சம்பள உடன்பாடு செய்யப்படும். புது சம்பள உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இந்நிலையில் இவர்களோடு கோவை மாவட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டனர். இதனால் 2 மாவட்டங்களும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, விசைத்தறி தொழிலாளர்களுக்கு அடிப்படை செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் ஊதியம் வழங்குவது சரியல்ல. 8 மணிநேரத்திற்கு 300 முதல் 350 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு ஒத்து வராததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.

இதனால், 2 மாவட்டங்களிலும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+