பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை: 3 வாலிபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி: நெய்வேலியில் பள்ளி மாணவி கொலை வழக்கில், போலீசாரிடம் 3 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் யார் கொலையாளி என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெய்வேலி அடுத்த வானதிராயபுரத்தை சேர்ந்த ரவிசந்தரன் மகள் சுனிதா(10). தனியார் பள்ளி ஒன்றில் 5 வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற சுனிதா, இரவாகியும் வீடு திரும்பவில்லை.

2 நாட்களுக்கு முன் தென்குத்து கிராமத்தில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் இருந்த கிணற்றில், உடல் அழுகி தலையில்லாத நிலையில் சுனிதாவின் உடல் கிடைத்தது. உடல் தலை நேற்று கிணற்றின் அடியில் அழுகி சிக்கியிருந்தது. சுனிதா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு, கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இது குறித்து விசாரித்து வந்த போலீசார். சம்பவத்தன்று சுனிதாவை ஒரு வாலிபர் சைக்கிளில் அழைத்து சென்றதை சிலர் கண்டதாக தெரிவித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் அய்யனார்(21) எனத் தெரிந்தது. சுனிதா கொலை செய்யப்பட்ட நாளிலிருந்து மாயமான அய்யனாரை, சென்னை தாம்பரத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது, பிடிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் தான் கொலை செய்திருக்க வேண்டும். சுனிதா வழக்கில், எந்தொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. கைதாகி உள்ள 3 பேரில் ஒருவர் மீது பலத்த சந்தேகம் உள்ளது. விரைவில் யார் கொலையாளி என்று தெரியவரும், என்றனர்.

மாணவி சுனிதாவை கற்பழிக்க முயன்று, பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+