மனிதாபிமானம் மரித்துவிடவில்லை என்பதற்கு ஜெயலலிதாவே சாட்சி - நாஞ்சில் சம்பத்
ஈரோடு: தமிழகத்தில் மனிதாபிமானம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஈரோட்டில் ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகமே பேராடியது.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மாநில சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 28ம் தேதி செங்கொடி 3 பேரையும் விடுவிக்க கோரி உயிர் தியாகம் செய்வதற்கு முன்பு அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அவரின் உயிர் தியாகம் வீணாகவில்லை.
தமிழர்களுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவை சரித்திரம் என்றும் மறக்காது. தமிழகத்தில் மனிதாபிமானம் மரித்து போகவில்லை என்று அண்ணா கூறியதற்கு ஜெயலலிதாவே சாட்சி, என்றார்.












Click it and Unblock the Notifications