ராகுல், பிரியங்கா ஆகியோரால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்: அரித்ரா
டெல்லி: எனது பெற்றோர் முருகன், நளினி ஆகிய 2 பேரும் குற்றமற்றவர்கள். எனது நிலையை ராகுல் மற்றும் பிரியங்காவில் புரிந்து கொள்ள முடியும் என நளினியின் மகள் ஹரித்ரா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவளவன், சாந்தன் உள்ளிட்ட 4 பேருக்கு, கடந்த 1999ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கைதான போது கர்ப்பமாக இருந்த நளினிக்கு சிறையில் பிறந்த மகள் அரித்ரா (19).
தனது பெற்றோரை விடுவிக்க உதவுமாறு கோரி சோனியா காந்தி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அரித்ரா லண்டனிலிருந்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை எனது பெற்றோரான நளினியும், முருகனும் குற்றமற்றவர்கள் என நம்புகிறேன்.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நினைத்தால், எனக்கு மன நிலை பாதிப்பது இருக்கிறது. எனது குழந்தை பருவம் மிகவும் துயரமானதாக இருந்தது.
எனது தந்தையின் செயல் குறித்து நான் ஆத்திரப்பட்டேன். ஆனால் அவர் என்ன நடந்தது என்பதை விளக்கிக் கூறிய பிறகுதான் அவர் மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நடந்த சம்பவங்களை என் தந்தை கண்ணீரோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். வாரந்தோறும் எனக்கு பெற்றோர் கடிதம் எழுதுகின்றனர்.
நடந்த சம்பவம் (ராஜீவ் படுகொலை) மிகவும் மோசமானது, துயரமானது. இருப்பினும் எனது பெற்றோர் குற்றமற்றவர்கள். இந்த தண்டனைக்கு தகுதியற்றவர்கள். அவர்களின் அருகாமை இல்லாமல் நான் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளேன். இதை கடந்த 20 ஆண்டுகளாக தந்தையை இழந்த கொடுமையை அனுபவித்து வரும் ராகுலும், பிரியங்காவும் புரிந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தனது தாயாரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உதவியதற்காக சோனியாவுக்கு இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி கூறுவதாகவும் அரித்ரா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications