இலங்கை எம்.பி. முன் தமிழக ஜோடி காதல் திருமணம்
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த காதல் திருமணம் ஒன்றில், இலங்கை எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாகர்கோவில் வேதா நகரை சேர்ந்தவர் மரியகொறன்சி பிரின்சி. இவரும் அம்பலபதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு முதலில் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சிவசேனா நிர்வாகிகள் இரு தரப்பு பெற்றோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்களது திருமணம் 2ம் தேதி காலை சுசீந்திரம் கோயிலில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டது. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக வந்துள்ள இலங்கை மட்டக்களப்பு பகுதி எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.
இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தமிழ்நாடு சிவசேனா மாநில பொது செயலாளர் சிவாஜி மாவட்ட தலைவர் பரமேஸ்ரவன் தம்பி, இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications