கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி போராட்டம்
கூடங்குளம்: கூடங்குளத்தில் உள்ள அணு உலையை மூடக் கோரி, செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க நிர்வாகி உதயகுமார், அகில இந்திய மீனவர்கள் சங்க தேசியத் தலைவர் அண்டன் கோமஸ் ஆகியோர் கூறியதாவது, கூடங்குளத்தில் துவங்க உள்ள அணு உலை, பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்து அபாயம் உள்ளது.
எனவே, கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். ஆனால், செப்டம்பர் 28 ம் தேதி முதல் கூடங்குளத்தில் அணு உலை செயல்படும் என இந்திய அணு மின் கழகத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்திறகு வலு சேர்க்கும் விதமாக சமூக சேவகர் அன்னா ஹசாரே, அருந்ததி ராய், மேதா பட்கர் ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications