நெஞ்சு வலியால் கூட மனிதன் சாகலாம், அப்போது என்ன பாதுகாப்பு?- அன்னா கேள்வி
ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): எனக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தேவைப்படாது. ஒருவன் நெஞ்சு வலியால் கூட சாகலாம். அப்போது அவனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று கேட்டுள்ளார் அன்னா ஹஸாரே.
அன்னா ஹஸாரேவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பை ஏற்பதற்கு அன்னா தயக்கம் வெளியிட்டுள்ளார்.
இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் வழக்கமான வாக்கிங்கை அவர் மேற்கொண்டார். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அன்னா,
சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங் மற்றும் ராஜ்குரு ஆகியோர் எந்த பாதுகாப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மனிதன் நெஞ்சுவலியால் கூட உயிரிழக்கலாம். அப்போது என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று கேட்டார். இருப்பினும் தான் இந்த பாதுகாப்பு குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார் அன்னா.












Click it and Unblock the Notifications