ரூ. 40,000 கடனைத் திருப்பித் தருவதில் தகராறு- அக்கா வீடு மீது குண்டு வீசிய தம்பி
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தனது அக்காவுடன் ஏற்பட்ட சண்டையில் கோபமடைந்த தம்பி ஒருவர் அக்காவின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார். இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
கமுதி வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது தம்பி இருளாண்டி. இந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவரின் வீடுகள் மீது இருளாண்டி சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் ஈஸ்வரி வீட்டில் வீசிய குண்டுவெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். வெடிக்காத நிலையில் இருந்த ஒரு குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். விசாரணையில், அக்கா ஈஸ்வரியிடம் ரூ. 40,000 கடன் வாங்கியுள்ளார் இருளாண்டி. ஆனால் அதைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அக்கா தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மீனாட்சி சுந்தரம் பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில்தான் குண்டைப் போட்டு விட்டார் இருளாண்டி.
அக்கா வீடு மீது தம்பி குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications