மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் 4,500 லிட்டர் கள்ளச்சராயம் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 4,500 லிட்டர் கள்ளச்சராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக சிலர் கள்ளச்சராயம் விற்பனை செய்து வருவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரவிக்குமார் மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக கள்ளச்சராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாகை எஸ்.பி. ராமர் மேற்பார்வையில் மதுவிலக்கு டிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையில் 80 போலீசார் சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் திடீர் சாராயவேட்டை நடத்தினர். அதில், 4,500 லிட்டர் பாண்டி சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications