பாங்க் ஆப் அமெரிக்கா: பணி நீக்க எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு!

இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியா என்ற கேள்வியையும் இந்த செய்தி கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கி பாங்க் ஆப் அமெரிக்கா. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி காரணமாக, சிக்கன நடவடிக்கையாக அடுத்த ஆண்டுக்குள் 10000 பணியாளர்களை நீக்கும் திட்டம் உள்ளதாக சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது.
இந்த நிலையில் இப்போது இந்த எண்ணிக்கை 30000 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 10 சதவீதத்தினரை குறைத்தால்தான் இப்போது சந்தையில் நிலைத்திருக்க முடியும் என வங்கி நம்புவதாகவும் அமெரிக்காவின் 'சார்லோட் அப்ஸர்வர்' தெரிவித்துள்ளது.
2007-2009 ஆண்டுகளில் பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் மற்றும் இந்த வங்கியின் துணை நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் காரணமாக வங்கி தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், இதிலிருந்து மீளவே இந்த பணி நீக்கம் என்றும் கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த வாரம், வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹதாவேவிடமிருந்து 5 பில்லியன் டாலரும், சீன வங்கியில் தனக்கிருந்த பங்குகளில் 10 சதவீதத்தை விற்று 8.3 பில்லியன் டாலர் நிதியும் பாங்க் ஆப் அமெரிக்கா திரட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications