திக்விஜய் சிங்கை மன நல ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்: அன்னா ஹஸாரே
Subscribe to Oneindia Tamil

அன்னா ஆதரவாளரான அரவிந்த் கேஜ்ரிவால் விதிமுறைகளை மீறி தனது என்ஜிஓ-வுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்துள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கேஜ்ரிவால் கலந்துகொண்டார் என்பதற்காக சட்டத்தை மாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் விமர்சித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாபா ராம்தேவ், அன்னா ஹஸாரே இருவருமே ஊழலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால் அதில் பாபா ராம்தேவ் ஒரு திருட்டு மற்றும் ஏமாற்றுப் பேர்வளி. அன்னா ஹஸாரே ஒரு சமூக ஆர்வலர். அதனால் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அன்னாவின் நிபந்தனைகளை ஏற்றது என்றார்.
இது குறித்து அன்னாவிடம் கேட்டதற்கு, திக்விஜய் சிங்கை மனநல மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications