லாட்டரி அதிபர் மார்ட்டினின் எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் சிபிஐ ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடி செய்து கைப்பற்றி, விற்பனை செய்ததாக மார்ட்டின் உள்ளிட்ட 7 பேரை சேலம் நில அபகரிப்பு மீட்புப் படை போலீசார் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் கேரளாவில் சட்ட விரோத லாட்டரி டிக்கெட் விற்பனை தொடர்பாக மார்ட்டின், அவரது கூட்டாளி ஜான் கென்னடி ஆகியோர் மீது சி.பி.ஐ 4 வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இந் நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள மார்ட்டின் பங்களாவில் கேரள மாநிலத்திலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.
அதே நேரத்தில் மார்ட்டினுக்குச் சொந்தமான எஸ்.எஸ். மியூசிக் தொலைக்காட்சியின் சென்னை தலைமை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications