ஒசாமா கொல்லப்பட்டதில் மகிழ்ச்சியில்லை: முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்
வாஷிங்டன்: 9/11 தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடையவில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆவணப்படங்கள் தயாரி்ககும் பீட்டர் ஸ்னால் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
ஜார்ஜ் புஷ் டாலாஸில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்தபோது அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களுடன் பேச விரும்புகிறார் என்று ரகசிய சேவை போலீசார் தெரிவித்தனர். அப்போது தான் அவருக்கு ஒசாமா கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த செய்தியைக் கேட்டு எனக்கொன்றும் மகிழ்ச்சியாக இல்லை என்று புஷ் எங்களிடம் தெரிவித்தார்.
அப்பாடா ஒரு வழியாக முடிந்தது என்ற உணர்வு தான் அவரிடம் இருந்தது என்று கூறியுள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்னால் ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார். அதற்காக அவர் புஷ்சிடம் பேட்டி எடுத்துள்ளார். அவருக்கு புஷ் அளித்த பேட்டியில், இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது நான் புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்தேன். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஒரு கோபுரம் தாக்கப்பட்டுள்ளது என்றதும் ஏதோ சிறிய ரக விமானம் என்று முதலில் நினைத்தேன்.
வானிலை மோசமாக இருந்திருக்கும் அல்லது விமானிக்கு ஏதாவது நடந்திருக்கும் என்று நினைத்தேன். வெள்ளை மாளிகை தலைமை ஊழியர் ஆன்டி கார்ட்ஸ் இன்னொரு கோபுரமும் தாக்கப்பட்டது என்று காதில் மெதுவாகக் கூறினார். அப்போது தான் அது தீவிரவாதத் தாக்குதல் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார் புஷ்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று புஷ்ஷிடம் கேட்டதற்கு இந்த கேள்வியை வெறுக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications