இன்றும் திருக்குறள் கேட்டு, வணக்கம் போட்டு விட்டு வெளியேறிய திமுக எம்எல்ஏக்கள்!
சென்னை: சட்டசபையில் இன்றும் திருக்குறள் கேட்டு முடிந்ததும், சபாநாயகருக்கு வணக்கம் வைத்து விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் தாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் வாய்ப்பு தருவதில்லை என்று திமுக தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் அனுமதி தரப்படுவதில்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் நேற்று அவர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வந்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்து பொருள் கூறிமுடித்ததும் அவருக்கு வணக்கம் கூறி விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து கேட்டதற்கு துரைமுருகன் கூறுகையில், திருக்குறள் கேட்டோம். மனதுக்கு நிறைவாக இருந்தது. அதன் பின்னர் வெளியே வந்து விட்டோம் என்றார்.
இன்றும் அதே பாணியில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறுகையில், சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வழி இல்லை. இருப்பினும் திருக்குறள் ஒலித்தது. கேட்டோம். பொருள் நன்றாக இருந்தது. மனதுக்கு நிறைவாக இருந்தது. எனவே எங்கள் பணியை முடித்து விட்டு புறப்பட்டு விட்டோம் என்றார்.
இப்படி எத்தனை நாட்களுக்கு திருக்குறள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கப் போகிறது திமுக என்பது குறித்து வேலு எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications