சுரங்க ஊழல்- கர்நாடக மாஜி முதல்வர் குமாரசாமி, மனைவி அனிதாவுக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முறைகேடாக அனுமதி தந்ததாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது மனைவி அனிதா குமாரசாமி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் அளித்தது.
சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முறைகேடாக அனுமதி தந்ததாக லோக் ஆயுக்தா அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செப்டம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அது உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார் குமாரசாமி. அவரது மனைவி சார்பிலும் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications