டெல்லியில் விடாமல் பெய்த அடை மழை: சுவர் இடிந்து பள்ளிக்கு சென்ற சிறுமி பலி
டெல்லி: டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மழை கொட்டித் தீர்த்து. இதனால் இன்று காலை 7. 30 மணி அளவில் கௌதம் காலனியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை வளாகச் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் ஒரு சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
2 முதல் 3 சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 4 மணியில் இருந்து 8. 30 மணி வரை 36.6 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் அருகில் உள்ள ரயில் பவன், ரபி மார்க், விகாஸ் மார்க், ஆப்பிரிக்கா அவினியூ உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications