For Daily Alerts
Just In
பி.எல்.பட்டப்படிப்பிற்கு செப்டம்பர் 12 ம் தேதி கவுன்சிலிங்
மதுரை: பி.எல்.பட்டப்படிப்பிற்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செப்.12ம் தேதி துவங்க உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேக்தர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில், மூன்றாண்டு பி.எல்.படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், செப்.12 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
செப்.12ம் தேதி ஓ.சி.பிரிவினருக்கும், செப்.13 முதல் 16ம் தேதி வரை பி.சி., எம்.பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடக்க உள்ளது. கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலை வளாகத்தில் நடைபெறும் இந்த கவுன்சிலிங்கிற்ககான தரவரிசை பட்டியல், www.tndlu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதோர், பல்கலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
English summary
For the colleges under the control of Tamil Nadu Ambedkar law university, B.L.degree Counseling will starts on September 12.
Story first published: Saturday, September 10, 2011, 12:58 [IST]