தமிழகம் முழுவதும் 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம்
வேலூர்: தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம் துவக்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள கிராம மக்களின் சட்டப் பிரச்னைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்ட உதவி மையம் 2010 என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம் தொடங்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஏ.ஜி.வில்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பொன். கலையரசன் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சட்ட உதவி மையத்துக்கு ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வழக்கறிஞர் ஒருவர் வருவார். அவரிடம், பொதுமக்கள் சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், என்றார்.












Click it and Unblock the Notifications