வன்முறை மூண்ட பரமக்குடியில் 3000 போலீஸார் குவிப்பு-144 போலீஸ் தடை உத்தரவு அமல்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: வன்முறை மூண்ட பரமக்குடியில், 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3000 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை பரமக்குடியில் நடந்த மிகப் பெரிய வன்முறையைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பரமக்குடியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் டிஐஜி சந்தீப் மிட்டல் படுகாயம்

இதற்கிடையே, பரமக்குடி கலவரத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி சந்தீப் மிட்டல் படுகாயமடைந்துள்ளார். அவர் மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி அவசர ஆலோசனை

இதற்கிடையே, பரமக்குடி கலவரம் தொடர்பாக மாநில டிஜிபி ராமானுஜம், அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+