9/11 தாக்குதலில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்த இங்கிலாந்து பிரதமர்
லண்டன்: 9/11 தாக்குதலில் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்ததாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனின் மனைவி சமந்தா 11-9-2001 அன்று வியாபார நிமித்தமாக நியூயார்க் சென்றிருந்தார். தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் தான் அவர் இருந்துள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காமரூன் கூறியதாவது,
9/11 தாக்குதல் நடந்தபோது நான் ஆக்ஸ்போர்டுஷைரில் உள்ள வீட்டில் இருந்தேன். என் மனைவி சமந்தா அப்போது 2 மாத கர்ப்பமாக இருந்தார். அவர் ஸ்மித்சன் கடை திறப்பு விழாவுக்காக நியூ யார்க் சென்றிருந்தார். அவர் இன்னும் ஸ்மித்சன் கடையின் ஆலோசகராக உள்ளார்.
அவர் உலக வர்த்தக மையத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும் தான் பத்திரமாக இருப்பதை அவரால் என்னிடம் தெரிவிக்க முடியவில்லை. தாக்குதல் நடந்தவுடன் தொலைபேசி இணைப்புகள் பழுதடைந்துவிட்டன.
அந்த நிமிடங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. அவர் உயிருடன் தான் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தவித்தேன். அவர் குரலைக் கேட்டப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அந்த நிமிடம் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications