தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்- தமிழக முதல்வர், அமைச்சர் ஆப்சென்ட்
டெல்லி: தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாருமோ பங்கேற்கவில்லை.
டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். முதல்வர்கள் வர முடியாத பட்சத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இருப்பினும் தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. அவரது சார்பில் எந்த அமைச்சரும் வரவில்லை.
தற்போது சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் முதல்வரால் பங்கேற்க முடியவில்லை. அமைச்சர்களையும் அனுப்ப முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த கூட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்தரி மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் புறக்கணித்து விட்டனர். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் வரவில்லை.












Click it and Unblock the Notifications