நில விவகாரம்: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தயா பாக்கியசிங். இவருக்கும் குமரி மாவட்ட பஞ்சாயசத்து தலைவர் அஜிதாவுக்கும் இடையே நில விற்பனை தொடர்பாக பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக தயா பாக்கிய சிங் சார்பில் நாகர்கோவில் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நில விவகாரத்தில் தன்னை மோசடி செய்வதாக கூறி இருந்தார். இது குறித்து வடசேரி போலீசார் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக உயர் மட்டக் குழு உறுப்பினர் ஜிஎம்ஷா உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு உள் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஜிஎம் ஷா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலதி, இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications