எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன்- ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வெண்கல சிலையை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று நமது நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
காரிமங்கலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலை முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் தெரிந்ததும் தலைமை கழகத்தின் சார்பில் புதிய சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தேன். அப்போது தி.மு.க. அரசு அந்த இடத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்கவில்லை.
இன்று மக்களின் ஆதரவோடு திறந்து வைக்கிறேன். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, ஆனால் மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான்.
பூமி உள்ளவரை எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும். அதை யாராலும் மறைக்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.கவை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன் என்றார்.













Click it and Unblock the Notifications