ஆரம்பமே சடசட சரிவு... அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

ஆரம்பமே இப்படி பெரும் வீழ்ச்சியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி ஆசிய பங்குச் சந்தைகளை கடுமையாக பாதித்துள்ளதால், அதன் எதிரொலி இந்தியா சந்தைகளிலும் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலையிலேயே 300 புள்ளிகளுக்கும் மேல் இழந்து தடுமாறிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், அடுத்த ஒரு மணிநேரம் கழித்து 291 புள்ளிகளை இழந்து 16,575.11 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 91 புள்ளிகளை இழந்து 4,967 புள்ளிகளாக இருந்தது.
அனைத்து முன்னணி நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.
ஆட்டம் கண்ட ஆசிய சந்தைகள்
ஜப்பானின் நிக்கி 225 புள்ளிகளை இழந்து தடுமாறியது. ஹாங்காங்கின் ஹாங்செங் 3 சதவீத வீழ்ச்சியைக் கண்டது.
சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் மற்றும் சீன சந்தைகளிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியிலிருந்து மீள முடியாத நிலை காணப்படுகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததால் இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications