உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்: பெண் நீதிபதி உள்பட 3 பேர் இன்று பதவியேற்பு
டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஜே. முகோபத்யாயா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கெஹர், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து அதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டுள்ளார்.
இவர்கள் 3 பேரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஹெச். கபாடியா முன்பு இன்று பதவியேற்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 31 நீதிபதிகளில் இதுவரை நீதிபதி கியான் சுதா மிஸ்ரா மட்டும் தான் பெண். இனி தேசாயை சேர்த்து இரண்டு பெண் நீதிபதிகள் இருப்பார்கள்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்குமாறு சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவிருக்கின்றனர்.
நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மாதத்தில் 58 வயதாகவிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு அவர் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு மே மாதத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன்னும் 7 ஆண்டுகள் சர்வீஸ் பாக்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
அவ்வாறு அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானால் ரங்நாத் மிஸ்ராவை அடுத்து இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது ஒரிசா மாநிலத்தவராவார்.
நீதிபதி முகோபத்யாயாவுக்கு பதில் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. பட்டாச்சார்யா குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி கெஹருக்கு பதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமாஜித் சென் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவிருக்கிறார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications