சென்னை டெம்பிள் ஸ்டெப்ஸ் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

9 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் உள்ள ஜஸ்ட் டயல் அலுவலகத்தை காலையில் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியுள்ளார்.
இந்தக் கட்டத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சரியாக 2.30 மணிக்கு அது வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து கிண்டி போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து அந்தக் கட்டடத்தில் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
சென்னை ஐ.டி நிறுவனங்கள், மால்களில் வெடிகுண்டு சோதனை:
இதற்கிடையே சென்னையில் உள்ள பல சாப்ட்வேர் நிறுவனங்கள், ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட மால்களில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
மத்திய உளவுப் பிரிவினரின் தகவலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications