ஜாமீனில் வெளியே வருவோர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்தால் உண்ணாவிரதம்- தி்முக
சென்னை: ஜாமீனில் வெளியே வரும் தி.மு.க.வினர் மீது மீண்டும் பொய் வழக்குகளை பதிந்து கைது செய்யப்பட்டால், தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் இருக்குமாறு, அக்கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கைது செய்யும் நடவடிக்கை அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் நேர்மையான முறையில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வரும் தி.மு.க.வினர் மீது மீண்டும் பல பொய் வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூர நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.
இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆங்காங்கே உள்ள தி.மு.க. தோழர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனநாயக முறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications