Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அபகரிப்பு வழக்கு: மு.க.முத்து மகன் அறிவுநிதிக்கு முன்ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் மு.க. முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முக முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்களில் அவர் கூறியிருப்பதாவது,

சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏ.வெங்கடேஷ் என்பவரது அதிகாரம் பெற்ற அன்பரசு என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், வேளச்சேரி 3-வது முக்கிய சாலையில் உள்ள தன் சொத்தை குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் அபகரிக்க முயற்சித்ததாகவும், இவர்கள் இருவருக்கும் நான் உதவியதாகவும், என் பெயரைச் சொல்லி குமாரவேலு மிரட்டியதாகவும் அதில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (16-வது குழு) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் என்னை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நில விவகாரம் தொடர்பாக குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் மீது ராஜேஸ் அண்ணாமலை என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கிலும் என்னை குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். எனவே இந்த 2 வழக்குகளிலும் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அறிவுநிதிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் தேவைப்பட்டால் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவுநிதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+