நில அபகரிப்பு வழக்கு: மு.க.முத்து மகன் அறிவுநிதிக்கு முன்ஜாமீன்
சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் மு.க. முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முக முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏ.வெங்கடேஷ் என்பவரது அதிகாரம் பெற்ற அன்பரசு என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், வேளச்சேரி 3-வது முக்கிய சாலையில் உள்ள தன் சொத்தை குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் அபகரிக்க முயற்சித்ததாகவும், இவர்கள் இருவருக்கும் நான் உதவியதாகவும், என் பெயரைச் சொல்லி குமாரவேலு மிரட்டியதாகவும் அதில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (16-வது குழு) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் என்னை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நில விவகாரம் தொடர்பாக குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் மீது ராஜேஸ் அண்ணாமலை என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கிலும் என்னை குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். எனவே இந்த 2 வழக்குகளிலும் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அறிவுநிதிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் தேவைப்பட்டால் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவுநிதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications