Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட நாடாக இங்கிலாந்து இருப்பது அம்சாவுக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றத் தான் இவ்வாறு அவதூறு புகார்களை தெரிவிப்பதாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் நடவடிக்கைகளால் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதே அம்சா தான் நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தார். அப்போது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனிலும் சென்னையில் செய்த வேலையை தொடர்கிறார். அம்சா ஒரு தமிழ் முஸ்லீ்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+