மணல் கடத்தலை தடுத்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: அதிமுக நிர்வாகி, 2 பேர் கைது
மார்த்தாண்டம்: மணல் கடத்தலை தடுத்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க 30-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடத்தல் கும்பல் நூதன முறையில் மணலைக் கடத்தி வருகின்ற. இந்நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் போலீசார் மீது மோதுவது போல் வேகமாக வந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விலகி உயிர் தப்பினர். தொடர்ந்து வேகமாக சென்ற லாரியை போலீசார் விரட்டிச் சென்றனர். 5 கிமீ விரட்டி சென்று மேல் புறம் பகுதியில் லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது டிரைவர் தப்பியோடிவிட்டார்.
லாரியில் இருந்த புரோக்கர்கள் களியக்காவிளை பேரூர் அதிமுக செயலாளர் அருள்ராஜ், திக்குறிச்சி சாம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் அனில்குமார், லாரி உரிமையாளர் கிரிஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications