சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் ரயில்கள் உரிய நேரத்தில் கிளம்பும்

இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
இன்று மாலை முதல் சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து ரயில் போக்குவரத்து இயல்பான நிலையை எட்டும். அனைத்து ரயில்களும் உரிய நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.
இருப்பினும் அரக்கோணம் விபத்து காரணமாக காட்பாடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெங்களூர் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு வந்து பின்னர் புறப்படும். எனவே இவை மட்டும் தாமதமாக செல்லும்.
இன்று கிளம்ப வேண்டிய பெங்களூர் மெயில், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், சேரன், பெங்களூர் சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் திட்டமிட்ட நேரத்தில் கிளம்பிச் செல்லும்.
13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதில் பயணிக்கவிருந்த கிட்டத்தட்ட 25 ஆயிரம் பயணிகளுக்கும் முழுக் கட்டணம் திருப்பித் தரப்படும். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் சென்டிரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications