டிவி நிருபரை தரக்குறைவாக பேசிய வழக்கு: கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: டிவி நிருபரை தரக்குரைவாக விமர்சித்ததற்காக நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன். அவரது அண்ணன் சங்கர சுப்பு மற்றும் 3 பேர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொம்பையா என்பவர் நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தார். அப்போது, தனியார்(jaya.tv) டிவி நிருபரை தரக்குரைவாக விமர்சித்ததாக கருப்பசாமி பாண்டியன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்காக பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமி பாண்டியனை வரும் 27-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருப்பசாமி பாண்டியன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு

கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் மீது மற்றொரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் பாண்டியன். இவருக்கு அங்கு 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதை வாங்க கடந்த 1986-ம் ஆண்டு குற்றாலத்தைச் சேர்ந்த அசோக் பாண்டியன் கிரைய ஒப்பந்தம் செய்தார். வருமான வரிச் சான்றிதழ் கொடுக்க அவர் காலதாமதம் செய்வதாக கூறி சாமுவேல் பாண்டியன் கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

மேலும் அசோக் பாண்டியனுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் நிலத்தை வேறு நபர்களுக்கு விற்கவும் ஏற்பாடு செய்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நிலத்தை விற்க உதவுமாறு சாமுவேல் பாண்டியன் அப்போதைய எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான கருப்பசாமி பாண்டியனை அணுகியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு குற்றாலத்தில் வைத்து அசோக் பாண்டியனிடம் ரூ. 1 கோடி வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் பெறுமாறு கருப்பசாமி பாண்டியன் மிரட்டினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் வழக்கை வாபஸ் வாங்கவில்லை.

இதையடுத்து பிரசனைக்குரிய 4.5 ஏக்கர் நிலத்தில் 3.5 ஏக்கர் நிலம் போலி பத்திரம் தயாரித்து சிலருக்கு விற்கப்பட்டது. மீதமுள்ள 1 ஏக்கர் நிலம் கருப்பசாமி பாண்டியனின் மைத்துனர் மகன்களான பழனிகுமார், ஐயப்பன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்படடது. இதை அவர்கள் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செய்யது மஜீத் உள்பட சிலருக்கு விற்றனர்.

இது தொடர்பாக அசோக் பாண்டியன் நெல்லை டிஐஜி வரதராஜூவிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கருப்பசாமி பாண்டியன், சாமுவேல் பாண்டியன், பழனிக்கு்மார், ஐயப்பன் உள்பட சிலர் மீது கொலை மிரட்டல், நில மோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+