அரக்கோணம் ரயில் விபத்து- விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சித்தேரி ரயில் நிலையம் அருகே நின்றிருந்த பாசஞ்சர் மின்சார ரயில் மீது வேகமாக வந்த மேல்மருவத்தூர்-வேலூர் பாஸ்ட் பாசஞ்சர் ரயில் படு வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் குமார் சக்ஸேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மண்டல ரயில் பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் இந்த விசாரணையை நடத்துவார். விரைவில் அவர் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

சிக்னலை சரியாக கவனிக்காததாலும், அதி வேகமாக ரயிலை ஓட்டி வந்ததாலும் விபத்து நடந்திருக்கலாம் என பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் பெங்களூர் -சென்னை மார்க்கத்தில் ரயில் பாதை சீரடைந்து விடும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+