லண்டன்: கார் திருடனிடம் ஏற்பட்ட தகராறில் இந்தியர் குத்தி கொலை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் கார் திருடனுடன் சண்டையிட்ட இந்தியரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பூர்ஜி(32). வெளிநாட்டுவாழ் இந்தியரான இவர் இங்கிலாந்தில் பெரிய தொழிலதிபராக இருந்தவர்.

இந்நிலையில் நேற்று லண்டனில் இருந்து இல்போர்ட் என்ற பகுதிக்கு தனது மெர்சிடஸ் காரில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் முகமூடி அணிந்த நபர் காரை மறித்து, காரின் சாவியை தருமாறு கேட்டார். காரை நிறுத்தி ஹர்ஜிந்தர் இறங்கிய உடன் அதற்கு மறுத்தார்.

அப்போது காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே இருந்த அவரது தோழியை வெளியே இழுத்துவிட்டனர். அதை தடுக்க வந்த ஹர்ஜிந்தர் சிங்கை முகமூடி நபர் கத்தியால் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் நிலைக்குலைந்த சிங் கார் சாவியை திருடனிடம் கொடுத்தார்.

அதில் படுகாயமடைந்த ஹர்ஜிந்தர் சாலையில் சரிந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடன் காருடன் மாயமானார். அப்பகுதியினர் உதவியுடன் ஹர்ஜிந்தரை அவரது காதலி மருத்துவமனையில் சேர்த்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹர்ஜிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுமார் 5 கி.மீ. தூரம் காரை ஓட்டி சென்ற ஒரு காட்டு பிரதேசத்தில் விட்டுவி்ட்டு திருடர்கள் ஓடிவிட்டனர். சிங்கின் தோழிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+