திமுகவினர் மீது யாரும் பொய்யாக நில அபகரிப்பு வழக்கு போடவில்லை: தா. பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுகவினர் மீது பொய் வழக்கு போடபப்டுகிறது என்பது உண்மையல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பரமகுடி கலவரம் மேலும் பரவாமல் அரசு நடவடிக்கை எடுத்ததற்கு மகிழச்சி. அதே நேரத்தில் கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் முன் கூட்டியே சிந்தித்து செயல்பட்டு இருக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் சமீப கூட்ட தொடரில் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நில அபகரிப்பு வழக்குகளில் தமிழக அரசால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது பல இடங்களில் பறிக்கப்பட்ட நிலம் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சமரசம் மூலம் நிலமும், பணமும் கிடைத்துள்ளது. திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகின்றது என்பது உண்மையல்ல.

தமிழகத்தில் மக்கள் விரும்பிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை அ.தி.மு.க. ஆட்சி தடம் புரளாத தண்டவாளத்தில் ஓடும் ரயிலை போல சிறப்பாக உள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிப்பட்டதே போதுமானதாகும். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை. எனவே 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டிய முழுபொறுப்பும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முறையான அறிவிப்பு வெளிவந்த பின்பு முடிவு செய்வோம். அதிமுவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+