அவதூறு வழக்கு: சிறையிலேயே பொன்முடி மீண்டும் கைது!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இந் நிலையில், கடந்த 5.6.2011 அன்று திருவாரூரில் நடந்த தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்ச்சித்து பேசியதாக அவர் மீது திருவாரூர் போலீசார் 3 பிரிவுகளில் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பொன்முடியை கைது செய்வதற்காக திருவாரூர் போலீசார் ஏற்கனவே 2 தடவை கடலூர் ஜெயிலுக்கு வந்தனர். ஆனால் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

இந் நிலையில் இன்று திருவாரூர் டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், குருசாமி தலைமையில் 30 போலீசார் மீண்டும் கடலூர் வந்தனர். அவர்கள் ஜெயிலுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேசிய அவர்கள் பின்னர் பொன்முடியை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை வேனில் ஏற்றி திருவாரூருக்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+