உபி தேர்தல் குறித்த கூட்டத்தில் பங்கேற்கும் சோனியா: சிகிச்சைக்கு பின் முதல் நிகழ்ச்சி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று நடக்கும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த மாதம் 4-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தான் இல்லாத நேரத்தில் கட்சி விவகாரங்களை மேற்கொள்ள 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். அதில் ராகுல் காந்தியும் இருந்தார்.
பூரண குணமடைந்த சோனியா கடந்த 8-ம் தேதி நாடு திரும்பினார். இருப்பினும் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க இன்று காங்கிரஸ் கூட்டம் நடக்கிறது. இதில் சோனியா கலந்து கொள்கிறார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோனியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.












Click it and Unblock the Notifications