அக்டோபர் 1ம் தேதி துபாயில் 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
துபாய்: துபாயில் வரும் அக்டோபர் 1ம் தேதி இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துவங்குகிறது. இந்த மாநாடு தொடர்ந்து 4 நாட்கள் நடக்கவிருக்கிறது.
இந்த மாநாடு 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
2ம் தேதி பகல் 12 மணிக்கு புதிய தொழில் வாய்ப்புகள் குறித்தும், 2:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல் குறித்தும், மாலை 4:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும்.
3ம் தேதி காலை 11:30 மணிக்கு இந்தியாவிலும், இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.
இறுதி நாளான 4ம் தேதி காலை 9 மணிக்குபயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழா, நிறைவு விழா நடைபெறும்.
இறுதி நாள் மாநாட்டில் உலக தமிழர்களுக்கு சேவை புரிந்தவர்களை பாராட்டி அவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், அமெரிக்கா ஸ்ரீ மீனாட்சி கோயிலை உருவாக்கிய எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ. தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோர் பெறுகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications