உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதால் ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலர்கள் 9 பேர் நீக்கம்
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலர்கள் 9 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்கோயில் பணியாளர் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி மன்னார்குடியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலரும், திருக்கோயில் பணியாளர் சங்க செயலாளருமான வேதலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) சார்பில் மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஊழியர்கள் உட்பட திருவாரூர் மாவட்ட அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜகோபாலசாமி கோயில் பாதுகாவலர்கள் அன்பழகன், தனபால், போஸ், மதியழகன், பஞ்சவர்ணம், வீரபாண்டியன், கோதண்டம், கலியபெருமாள் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து கோவில் செயல் அலுவலர் கணேசன் அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு பதில் புதிதாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications